இது தொடர்பாக பேசிய ர் சிட்டான்ஷு கோடக், ''சஞ்சு சாம்சன் ஒரு சீனியர் வீரர். அவர் மிகவும் திறமையானவர். எல்லோரும் விரும்புவது போல் அவர் அதிக ரன்கள் எடுக்காமல் இருக்கலாம், ஆனால் அது கிரிக்கெட் வாழ்க்கையின் ஒரு பகுதி. சில நேரங்களில் நீங்கள் தொடர்ந்து ஐந்து இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் குவிப்பீர்கள், சில நேரங்களில் சற்று ரன் வறட்சி ஏற்படும்.
இந்தியாவுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளார்
எனவே, ஒரு தனிப்பட்ட வீரர் தனது மனதை எப்படி வலுவாக வைத்திருக்கிறார் என்பதைப் பொறுத்தது. வெளிப்படையாக, அவரை நல்ல மனநிலையில் வைத்திருப்பது எங்கள் வேலை. அவர் பயிற்சி செய்கிறார், கடினமாக உழைக்கிறார். சஞ்சுவால் என்ன செய்ய முடியும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். எனவே, சஞ்சுவைப் பற்றி அதிகம் சொல்ல ஒன்றுமில்லை, ஏனெனில் அவர் இந்தியாவுக்கு மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.