Sanju Samson: டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார்.
டி20 உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டி இந்தியா, இங்கிலாந்து இடையே நடைபெறுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அன்படி இந்திய அணியின் ரன் கணக்கைத் தொடங்கிய சஞ்சு சாம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
23
மீண்டும் சொதப்பிய அபிஷேக்
எதிர் திசையில் அதிரடி காட்ட நினைத்த அபிஷேக் சர்மா வெறும் 7 பந்துகளை சந்தித்து 9 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்து ரசிகர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி அளித்தார். மறு முனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் ஒவ்வொரு பந்தையும் தேர்வு செய்து அடித்தார். குறிப்பாக அவர் அடித்த ஒவ்வொரு ஷாட்டையும் கண்களில் ஒத்திக் கொள்ளலாம் என்று சொல்லும் அளவிற்கு சஞ்சுவின் பேட்டிங் இந்திய ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
33
அரைசதம் கடந்து அசத்தல்
சஞ்சுவுடன் ஜோடி சேர்ந்த இஷான் கிஷனும் தனது சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தினார். பவர்பிளேயில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் வெறும் 26 பந்துகளில் அரை சதம் கடந்த ரசிகர்களுக்கு வானவேடிக்கைக் காட்டினார். 10 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் குவித்தது.