ஆனால், ஜடேஜா வலி நிவாரணியைத் தான்(ஆயின்மெண்ட்) தேய்த்தார் என்றும், பந்தை சேதப்படுத்தவில்லை என்றும் இந்திய அணி மற்றும் பிசிசிஐ சார்பில் தெளிவுபடுத்தப்பட்டது. ஆனாலும் கூட, களத்தில் கள நடுவர்களின் அனுமதியின்றி ஆயின்மெண்ட் தேய்த்தது ஐசிசி விதி 2.20ன் படி குற்றம் என்பதால் போட்டி ஊதியத்தில் 25 சதவிகிதத்தை ஜடேஜாவிற்கு அபராதமாக விதித்துள்ளது ஐசிசி.