இனியும் உங்களையே புடிச்சு தொங்கிட்டு இருக்க முடியாது.. இந்திய டி20 அணியிலிருந்து ஓரங்கட்டப்படும் ரோஹித் - கோலி

First Published Dec 29, 2022, 9:05 PM IST

ரோஹித் சர்மா - விராட் கோலியை தாண்டி இந்திய டி20 அணி குறித்து தொலைநோக்கு பார்வையுடன் தேர்வாளர்கள் யோசிக்கிறார்கள் என்றால் அது நல்லதுதான். ஆனால் அதேவேளையில் அவர்களுக்கு பதிலாக ஆடும் இளம் வீரர்கள் நன்றாக ஆடிவிட்டால் தேர்வாளர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் கௌதம் கம்பீர்.
 

ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய இருபெரும் டி20 தொடர்களில் இந்திய அணி தோல்வியடைந்து அதிருப்தியளித்தது. பவர்ப்ளேயில் அதிரடியாக ஆடாமல், இந்திய அணியின் மந்தமான அணுகுமுறைதான் தோல்விக்கு காரணமாக அமைந்தது. 
 

எனவே நவீனகால டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்றவாறு, அதிரடியாக ஆடும் இளம் வீரர்களை கொண்ட அணியை கட்டமைக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்தன. சீனியர் வீரர்களை ஒதுக்கிவிட்டு, ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களை கொண்ட அணியை கட்டமைத்து, அடுத்த டி20 உலக கோப்பைக்கு தயாராகி, ஆக்ரோஷமான அணுகுமுறையை கையில் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

பாகிஸ்தான் வெற்றியை ஜீரணிக்க முடியாத பிசிசிஐ..! வாய்க்கு வந்ததை எல்லாம் பேசும் ரமீஸ் ராஜா
 

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் இளம் வீரர்களை கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள கௌதம் கம்பீர், ரோஹித் சர்மா, விராட் கோலியை நீக்கியது மிகப்பெரிய முடிவு. ஆனால் இதற்கு முன் இந்தமாதிரியான அதிரடி நடவடிக்கைகளை வெளிநாட்டு கிரிக்கெட் அணிகள் எடுத்துள்ளன. இங்கிலாந்து அணி பவரான, அதிரடியாக ஆடக்கூடிய இளம் வீரர்களை கொண்ட அணியை கட்டமைத்தது. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு தகுதியான அணியை கட்டமைத்தது. ஆஸ்திரேலியா மற்றும் மற்ற சில அணிகளும் இதுமாதிரியான அதிரடி முடிவுகளை எடுத்தன. 

அடுத்த டி20 உலக கோப்பைக்கு இந்திய அணி ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை தாண்டி சிந்திக்கிறதா என்பது தேர்வாளர்களுக்குத்தான் தெரியும். ரோஹித் மற்றும் கோலிக்கு ஓய்வளித்துவிட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கிறார்கள். அவர்கள் இலங்கை தொடரில் ஒருவேளை மிகச்சிறப்பாக ஆடிவிட்டால், மீண்டும் ரோஹித் - கோலி அணிக்குள் வருவதென்றால், சிறப்பாக ஆடிய அந்த இளம் வீரர்களை எப்படி நீக்குவது..?

தினேஷ் கார்த்திக் சொன்னது நடந்தது.. நண்பனை கைவிட்ட கேப்டன் ரோஹித்..! சீனியர் வீரரின் கிரிக்கெட் கெரியர் ஓவர்

கோலிக்கு பதிலாக 3ம் வரிசையில் இறங்கும் வீரரும், ரோஹித்துக்கு பதிலாக ஓபனிங்கில் ஆடும் வீரரும் சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்தால் தேர்வாளர்கள் அடுத்து என்ன செய்வார்கள்? அதற்கு தேர்வாளர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். 2024ம் ஆண்டு நடக்கும் டி20 உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவரையும் டி20 ஃபார்மட்டிலிருந்து ஓரங்கட்டுவது என்று முடிவெடுத்துவிட்டால் அதுவும் நல்லதுதான் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

click me!