இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள கௌதம் கம்பீர், ரோஹித் சர்மா, விராட் கோலியை நீக்கியது மிகப்பெரிய முடிவு. ஆனால் இதற்கு முன் இந்தமாதிரியான அதிரடி நடவடிக்கைகளை வெளிநாட்டு கிரிக்கெட் அணிகள் எடுத்துள்ளன. இங்கிலாந்து அணி பவரான, அதிரடியாக ஆடக்கூடிய இளம் வீரர்களை கொண்ட அணியை கட்டமைத்தது. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு தகுதியான அணியை கட்டமைத்தது. ஆஸ்திரேலியா மற்றும் மற்ற சில அணிகளும் இதுமாதிரியான அதிரடி முடிவுகளை எடுத்தன.