கொரோனா விதிமுறைகளை மீறிய வீரர்கள்..! ரோஹித் சர்மா உட்பட 5 இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

First Published Jan 2, 2021, 9:22 PM IST

ரோஹித் சர்மா உட்பட ஐந்து இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில், 3வது டெஸ்ட் வரும் 7ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.
undefined
கொரோனா இன்னும் முற்றிலும் ஒழியாத நிலையில், அனைவரின் பாதுகாப்பு கருதி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுகின்றன. இந்நிலையில், ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், ஷுப்மன் கில், பிரித்வி ஷா, நவ்தீப் சைனி ஆகிய ஐந்து வீரர்களும் ஒன்றாக இணைந்து உணவு உட்கொண்ட வீடியோ வைரலான நிலையில், அவர்கள் ஐந்து பேரும் மற்ற வீரர்களின் பாதுகாப்பு கருதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
undefined
ஹோட்டலுக்கு சென்ற ஐந்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறினார்களா என்பது குறித்து பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா விசாரணை நடத்தவுள்ளது.
undefined
click me!