இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை வெளியிட்டுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய பார்த்தீவ் படேல், மூன்று முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சிறப்பு வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட ஒரு அணியைப் பரிந்துரைத்தார்.
நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் துருவ் ஜுரெல் ஆகிய இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில் மட்டுமே நிச்சயமற்ற தன்மை உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
6ம் இடத்தில் சிக்கல்
“யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள். சாய் சுதர்சன் 3-ம் இடத்திலும், சுப்மன் கில் 4-ம் இடத்திலும், ரிஷப் பந்த் 5-ம் இடத்திலும் விளையாடுவார்கள். 6-ம் இடம் சற்று சிக்கலானது. மற்றபடி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இருப்பார்கள்” என்று படேல் விளக்கினார்.