ஏற்கனவே ரிஷப் பண்ட் விபத்து காரணமாக கடந்த ஐபிஎல் சீசன்களில் விளையாடாத நிலையில், அவருக்குப் பதிலாக டேவிட் வார்னர் கேப்டனாக இருந்தார். இப்போது ரோகித் சர்மா டெல்லிக்கு வந்தால், அவர் தான் கேப்டனாக நியமிக்கப்பட அதிக சாத்தியக் கூறுகள் இருக்கிறது. மேலும், டெல்லியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் உடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்கலாம். ஆனால், அவர் டெல்லிக்கு வந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம் என்பது குறிப்பிடத்தக்கது.