#AUSvsIND ஆஸி.,யின் கொட்டத்தை அடக்கும் இந்தியா..! கடைசி டெஸ்ட்டில் ஆட மறுக்கும் பிசிசிஐ?

First Published Jan 4, 2021, 5:20 PM IST

ஆஸி.,க்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ஆடுவது குறித்து பிசிசிஐ மறுபரிசீலனை செய்கிறது. பிரிஸ்பேனில் நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ள கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி ஆடுவது சந்தேகமாகியுள்ளது.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸி., அணியும் 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில், 3வது டெஸ்ட் வரும் 7ம் தேதி சிட்னியின் தொடங்குகிறது. கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது.
undefined
.சிட்னி டெஸ்ட்டுக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், மெல்போர்ன் ஹோட்டலில் ஒன்றாக இணைந்து சாப்பிட்ட ரோஹித் சர்மா, பிரித்வி ஷா, நவ்தீப் சைனி, ஷுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகிய ஐவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
undefined
இதற்கிடையே, சிட்னியில் நடக்கும் 3வது டெஸ்ட் முடிந்து 4வது டெஸ்ட் போட்டி நடக்கும் பிரிஸ்பேனில் இந்திய வீரர்கள் மீண்டும் சில நாட்கள் குவாரண்டினில் வைக்கப்படுவார்கள் என்று குயின்ஸ்லாந்து(பிரிஸ்பேன் இருக்கும் மாகாணம்) அரசு தெரிவித்துள்ளது. சிட்னிக்கு கிளம்பும் முன், துபாயிலும், பின்னர் சிட்னியிலும் தலா 2 வாரங்கள் என மொத்தமாக கிட்டத்தட்ட ஒரு மாத காலம் குவாரண்டினில் இருந்த இந்திய வீரர்கள், பிரிஸ்பேனில் மீண்டும் குவாரண்டினில் இருக்க விரும்பவில்லை.
undefined
குவாரண்டின் என்ற பெயரில் தங்கள் மீது போடப்படும் அழுத்தம் என்றுதான் இதை இந்திய வீரர்கள் பார்க்கின்றனர். 2வது டெஸ்ட்டில் ரஹானே தலைமையிலான இந்திய அணி, கோலி, ஷமி ஆகிய நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லாமலேயே ஜெயித்தது. இந்நிலையில், இந்திய அணி மீது எதிர்மறையான வகையில் அழுத்தம் போடும் விதமாக கூடுதல் குவாரண்டின் என்று ஆஸி., சொன்னது இந்திய வீரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
undefined
இந்திய வீரர்கள் துபாயிலும், பின்னர் சிட்னியிலும் குவாரண்டினில் இருந்ததை சுட்டிக்காட்டி, பிரிஸ்பேனில் மீண்டும் குவாரண்டினில் இருக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ள இந்திய அணி நிர்வாகம், ஆஸி., வீரர்களை போலவே இந்திய வீரர்களையும் நடத்தவேண்டும் என்றும், மீண்டும் குவாரண்டினில் வீரர்கள் வைக்கப்படுவார்களேயானால் பிரிஸ்பேனுக்கு வரமுடியாது; வேண்டுமென்றால் சிட்னியிலே கடைசி டெஸ்ட்டையும் நடத்துமாறு இந்திய அணி நிர்வாகம் தெரிவித்தது.
undefined
விதிமுறைகள் எல்லாருக்கும் பொதுவானது. இந்திய அணி விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றமுடியவில்லை என்றால் இங்கு(பிரிஸ்பேன்) வரவே தேவையில்லை என்று எம்பிக்களான ஜோஸ் பேட்ஸ் மற்றும் டிம் மாண்டர் ஆகியோர் தெரிவித்தனர். இது இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
undefined
ஆஸி.,யின் மக்கள் பிரதிநிதிகளே இந்திய அணி பிரிஸ்பேனுக்கு வர தேவையில்லை என்று உதாசினப்படுத்தி பேசியிருப்பது இந்திய அணிக்கு அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி விதிகளை பின்பற்ற விரும்பவில்லையென்றால், ரோஹித் சர்மாவை 2 வாரம் குவாரண்டினில் வைத்திருந்திருக்காது. நாங்கள் விதிகளை பின்பற்றவே விரும்புகிறோம் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார். மேலும், குயின்ஸ்லாந்து நிர்வாகம் குவாரண்டின் நடைமுறைகளில் அதே கண்டிப்பை காட்டும் பட்சத்தில், இந்திய அணி கடைசி டெஸ்ட்டில் ஆடுவது குறித்து மறுபரிசீலனை செய்கிறது. கடைசி டெஸ்ட்டில் ஆடாமல் திரும்புவதற்கான வாய்ப்பு கூட உள்ளது.
undefined
click me!