இப்படியாக 7 மாதங்களில் 7 கேப்டன்கள் மாறிய நிலையில், இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேசிய கங்குலி, சிறிய காலக்கட்டத்தில் அதிகமான பேர் கேப்டனாக செயல்பட்டிருக்கின்றனர் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால், சூழ்நிலை காரணமாக இது நடந்தது. ரோஹித் காயத்தால் தென்னாப்பிரிக்காவில் ராகுல் கேப்டன்சி செய்தார்.