இந்திய ரசிகர்களை இனரீதியாக விமர்சித்த இங்கிலாந்து ரசிகர்..! ஆளை கண்டுபிடித்து அலேக்கா தூக்கிய இங்கி., போலீஸ்

First Published Jul 9, 2022, 5:38 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியில் இந்திய ரசிகர்களை இன ரீதியாக விமர்சித்த இங்கிலாந்து ரசிகரை பிர்மிங்காம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையே கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி ஜூலை 1 முதல் 5ம் தேதி வரை எட்ஜ்பாஸ்டனில் நடந்தது.  இந்த போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது.
 

அதைத்தொடர்ந்து இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்துவருகிறது. டி20 தொடர் முடிந்ததும், ஒருநாள் தொடர் நடக்கவுள்ளது.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டின்போது, ஸ்டேடியத்தில் இருந்த இந்திய ரசிகர்களை இங்கிலாந்து ரசிகர்கள் சிலர் இனரீதியாக விமர்சித்தனர். இதை படம்பிடித்து இந்திய ரசிகர் ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட, காட்டுத்தீயாய் இச்சம்பவம் பரவியது.
 

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இதுதொடர்பாக, சம்மந்தப்பட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய பிரமிங்காம் போலீஸார், இந்த வழக்கில் 32 வயது இங்கிலாந்து இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர். 

click me!