இந்திய அணி கேப்டன் ரோஹித், பயிற்சியாளர் டிராவிட் மீது பிசிசிஐ தலைவர் கங்குலி அதிருப்தி..?

First Published Sep 22, 2022, 9:26 PM IST

இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் கடைசியாக ஆடிய போட்டிகளில் 3-4 தோல்விகளை சந்தித்துள்ள நிலையில், அதுதொடர்பாக பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கருத்து கூறியுள்ளார்.
 

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிரமாக தயராகிவரும் நிலையில், இந்திய அணி இன்னும் சில பரிசோதனைகளை செய்துவருவது அதிருப்தியளிக்கிறது.
 

மேலும் கடைசியாக ஆடிய போட்டிகளில் 3-4 தோல்விகளையும் சந்தித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஆசிய கோப்பையில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளிடம் தோற்று ஃபைனலுக்கு முன்னேறாமல் ஏமாற்றத்துடன் வெளியேறியது.

இதையும் படிங்க - பென் ஸ்டோக்ஸ் வேற லெவல் ஆல்ரவுண்டர்ங்க.. பாண்டியா அந்தளவுக்குலாம் ஒர்த் இல்ல..! முன்னாள் வீரர் அதிரடி

அதைத்தொடர்ந்து நடந்துவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் முதல் டி20 போட்டியில் 208 ரன்களை குவித்தும் கூட, அதை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியை தழுவியது. டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், இந்திய அணியின் தொடர் தோல்விகள் கவலையளிக்கிறது.

இதையும் படிங்க - அவர்தான் உங்க எதிர்காலம்.. இந்திய அணியின் மிகப்பெரிய குழப்பத்திற்கு ஈசியா தீர்வு சொன்ன மேத்யூ ஹைடன்
 

இந்நிலையில், இதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, இந்திய அணி 2-3 தோல்விகளை அடைந்திருக்கிறது. ஆனால் இந்திய அணியின் கிராஃப் நன்றாக இருக்கிறது. ரோஹித் சர்மா சிறந்த கேப்டன். அவர் கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அவரது வெற்றி விகிதம் 82 சதவிகிதம் ஆகும். அவர் கேப்டன்சி செய்துள்ள 35 போட்டிகளில் 4 தோல்விகளை மட்டுமே சந்தித்திருக்கிறார். கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்  ஆகிய இருவருமே அணி மீது அதிக அக்கறை கொண்டவர்கள். கண்டிப்பாக நாக்பூர் டி20யில் கம்பேக் கொடுப்பார்கள் என நம்புகிறேன். 2-3 தோல்விகளால் அணி மீதான எனது மதிப்பீடு குறையாது என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

click me!