டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிரமாக தயராகிவரும் நிலையில், இந்திய அணி இன்னும் சில பரிசோதனைகளை செய்துவருவது அதிருப்தியளிக்கிறது.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, இந்திய அணி 2-3 தோல்விகளை அடைந்திருக்கிறது. ஆனால் இந்திய அணியின் கிராஃப் நன்றாக இருக்கிறது. ரோஹித் சர்மா சிறந்த கேப்டன். அவர் கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அவரது வெற்றி விகிதம் 82 சதவிகிதம் ஆகும். அவர் கேப்டன்சி செய்துள்ள 35 போட்டிகளில் 4 தோல்விகளை மட்டுமே சந்தித்திருக்கிறார். கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகிய இருவருமே அணி மீது அதிக அக்கறை கொண்டவர்கள். கண்டிப்பாக நாக்பூர் டி20யில் கம்பேக் கொடுப்பார்கள் என நம்புகிறேன். 2-3 தோல்விகளால் அணி மீதான எனது மதிப்பீடு குறையாது என்று கங்குலி தெரிவித்துள்ளார்.