டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி காம்பினேஷன் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், விக்கெட் கீப்பராக யார் ஆடுவது என்பதுதான் இப்போதுவரை குழப்பமாக உள்ளது. ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்துவந்தார்.
ஆனால் தினேஷ் கார்த்திக் கடைசி 5 ஓவர்களில் மட்டுமே இறக்கிவிடப்படுகிறார். 10-12 பந்துகள் மட்டுமே பேட்டிங் ஆடுகிறார். அதைத்தான் அவரும் விரும்புகிறார். தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் யாரை விக்கெட் கீப்பராக ஆடவைப்பது என்று இந்திய அணி நிர்வாகம் இன்னும் திடமான முடிவெடுக்கவில்லை.
தினேஷ் கார்த்திக் குறித்து பேசிய மேத்யூ ஹைடன், தினேஷ் கார்த்திக்கின் ரோல் என்ன என்பதை நான் யோசிக்கிறேன். தினேஷ் கார்த்திக்கை பற்றி நான் மதிப்பில்லாமல் பேசவில்லை. ஆனால் அவர் இன்னும் அதிகமாக பேட்டிங் ஆடவேண்டும். அவர் சிறந்த பிளேயர். அவர் டெத் ஓவர்களில் ஆடும் அருமையான ஷாட்டுகளை முன்கூட்டியே இறங்கியும் ஆடமுடியும். எனவே அவரை இன்னும் மேலே இறக்கிவிட வேண்டும் என்று மேத்யூ ஹைடன் தெரிவித்தார்.