#AUSvsIND இதெல்லாம் கொஞ்சம்கூட சரியில்ல.. கிரிக்கெட் ஆஸி.,யிடம் அதிருப்தியை தெரிவித்த பிசிசிஐ..!

First Published Jan 7, 2021, 3:44 PM IST

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ள பிரிஸ்பேனில் இந்திய வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்த அதிருப்தியை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளது பிசிசிஐ.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில், 3வது டெஸ்ட் சிட்னியில் இன்று(7ம்தேதி) தொடங்கி நடந்துவருகிறது. கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் நடப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது.
undefined
ஆனால் பிரிஸ்பேன் அமைந்திருக்கும் குயின்ஸ்லாந்து மாகாண அரசு, இந்திய வீரர்களுக்கு கொரோனா விதிகள் என்று மீண்டும் குவாரண்டினில் இருக்க வலியுறுத்துகிறது. ஆஸி.,க்கு வருவதற்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்தில் 2 வாரம் குவாரண்டினில் இருந்து, பின்னர் ஆஸி.,க்கு வந்த பின்னர் 2 வாரம் குவாரண்டினில் இருந்த இந்திய வீரர்கள், பிரிஸ்பேனில் மீண்டும் குவாரண்டினில் இருக்க வேண்டும் என்ற குயின்ஸ்லாந்து நிர்வாகம் வலியுறுத்துவதால் அதிருப்தியில் உள்ளனர்.
undefined
இந்திய அணி நிர்வாகம் இதுகுறித்த அதிருப்தியை வெளிப்படுத்தியதையடுத்து, விதிகளை பின்பற்ற முடியவில்லை என்றால், இந்திய அணி பிரிஸ்பேனுக்கு வரவே தேவையில்லை என்று குயின்ஸ்லாந்து எம்பிக்கள் ரோஸ் பேட்ஸ் மற்றும் டிம் மாண்டர் பேசியது இந்திய அணி நிர்வாகத்தை மேலும் அதிருப்தியடைய செய்தது. இதற்கிடையே, பிரிஸ்பேன் டெஸ்ட் குறித்த எந்த அதிகாரப்பூர்வமான கருத்தும் பிசிசிஐயிடமிருந்து வரவில்லை என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்திருந்தது.
undefined
இந்நிலையில், பிரிஸ்பேன் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் கூடுதல் குவாரண்டின் குறித்த அதிருப்தியை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் மூலம் பிசிசிஐ தெரியப்படுத்தியிருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது. பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதால், கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்த விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆஸ்திரேலியா விதிகள் குறித்து கடுமை காட்டும் பட்சத்தில், இந்திய அணி கடைசி டெஸ்ட்டில் ஆட திட்டவட்டமாக மறுத்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
click me!