ஆசியக் கோப்பை சர்ச்சை! ஹாரிஸ் ராஃப்புக்கு 2 போட்டிகளில் தடை! சூர்யகுமார், பும்ராவுக்கும் தண்டனை!

Published : Nov 04, 2025, 10:00 PM IST

ஆசியக் கோப்பையில் ஐசிசி நடத்தை விதிகளை மீறிய ஹாரிஸ் ராஃப்புக்கு 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் சூர்யகுமார் யாதவ், பும்ராவுக்கும் ஐசிசி தண்டனை வழங்கியுள்ளது.

PREV
15
ஆசியக் கோப்பை சர்ச்சை

அண்மையில் நடந்து ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்த போட்டியில் பல்வேறு சம்பங்கள் நடந்தேறின. பஹல்காம் தாக்குதல், எல்லையில் நடந்த மோதல் ஆகியவற்றை காரணம் காட்டி இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களை முற்றிலுமாக புறக்கணித்தனர். அவர்களுடன் கைகுலுக்கவில்லை. மேலும் ஆசிய கிரிக்கெட் தலைவரான பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து இந்திய அணி வீரர்கள் கோப்பையையும் வாங்கவில்லை.

25
ஹாரிஸ் ராஃப்பின் மோசமான செயல்

இந்திய அணி புறகணித்ததால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃப் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ரசிகர்களை பார்த்து தனது விரல்களை உயர்த்தி 0 6 என்று காட்டினார். 

இது, இந்த ஆண்டு மே மாதம் இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு, எல்லையில் நடந்த நான்கு நாள் மோதலின் போது ஆறு இந்தியப் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறும் ஆதாரமற்ற கூற்றுகளைக் குறிப்பதாகும்.

2 போட்டிகளில் விளையாட தடை

இதேபோல் அரைசதம் அடித்த பிறகு மற்றொரு பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான் துப்பாக்கியால் சுடுவது போன்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டதும் சர்ச்சையானது. இந்த நிலையில் இந்திய ராணுவத்தை சீண்டிய பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃப் இரண்டு போட்டிகளில் விளையாட ஐசிசி அதிரடியாக தடை விதித்துள்ளது. 

இதனால் இன்று (நவம்பர் 4) மற்றும் 6 ஆம் தேதிகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாகிஸ்தானின் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஹாரிஸ் ராஃப் விளையாட முடியாது.

35
சூர்யகுமார், பும்ராவுக்கும் தண்டனை

இதேபோல் பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹானுக்கும் போட்டிக் கட்டணத்தில் 30% அபராதமும் ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் வழங்கப்பட்டது. மேலும் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டி வெற்றிக்குப் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் பஹல்காம் குறித்து பேசியதற்காக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்வுக்கு ஐசிசி 30% அபராதம் விதித்துள்ளது. இதேபோல் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஐசிசி ஒரு தகுதி இழப்பு புள்ளியை வழங்கியுள்ளது.

45
பும்ராவுக்கு ஏன் தண்டனை?

பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா, பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃபை ஆட்டமிழக்கச் செய்த பிறகு "விமான விபத்து" கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதாவது ராஃபை போல்டாக்கிய பிறகு பும்ரா தனது கையால் விமானம் நொறுங்குவது போல் சைகை செய்தார். இது ஹாரிப் ராஃப் இந்திய ராணுவத்தை அவமதித்ததற்கு பதிலடியாக அமைந்தது. ஆனால் பும்ராவின் செயல் ஐசிசி விதியை மீறிய செயல் என்பதால் அவருக்கு ஒரு தகுதி இழப்பு வழங்கப்பட்டுள்ளது.

55
எஸ்கேப் ஆன அர்ஷ்தீப் சிங்

அதே வேளையில் சர்ச்சையில் சிக்கிய இந்திய பாஸ்ட் பவுலர் அர்ஷ்தீப் சிங் அபராதம் மற்றும் தண்டனையில் இருந்து தப்பியுள்ளார். சூப்பர் ஃபோர் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு அர்ஷ்தீப் சிங் ஹாரிஸ் ராஃபுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபாச சைகை செய்தார். ஆனால் அவர் குற்றவாளி இல்லை என அறிவித்த ஐசிசி அவருக்கு எந்த தண்டனையும் விதிக்கவில்லை.

Read more Photos on
click me!

Recommended Stories