இது மட்டுமின்றி நமது சிங்கப் பெண்களுக்கு பரிசுகளும் குவிந்து வருகின்றன. முதல் உலக்கோப்பையை தட்டித் தூக்கிய இந்திய அணிக்கு 4.48 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.39.55 கோடி) பரிசுத்தொகையை ஐசிசி வழங்கியுள்ளது. மேலும் பிசிசிஐ சார்பில் இந்திய அணிக்கு ரூ.51 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது.
தொழில் அதிபர் சூப்பர் அறிவிப்பு
இந்நிலையில், கோப்பையை கையில் ஏந்திய இந்திய வீராங்கனைகளுக்கு வைர நகைகள் வழங்க உள்ளதாக தொழில் அதிபர் கோவிந்த் தோலகியா அறிவித்துள்ளார். அதாவது சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபரும், ராஜ்யசபா உறுப்பினருமான கோவிந்த் தோலகியா, ஸ்ரீ ராமகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (SRK) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார்.