கேப்டனும், பயிற்சியாளரும் என் மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். நானே கூட என்னைச் சந்தேகப்பட்டேன். இதற்கு முன்பு நான் இப்படி ஒரு சூழலை எதிர்கொண்டதில்லை என்று அபிஷேக் சர்மா தெரிவித்தார்.
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. . இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 255 ரன்கள் குவித்தது.
பின்பு இமாலய இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி ரன்களுக்கு 19 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 96 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 4 ஓவரில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகன் விருது வென்றார்.
24
அபிஷேக் சர்மா முக்கியமான அதிரடி ஆட்டம்
இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் வெறும் 46 பந்துகளில் 8 சிக்சர்கள், 5 பவுண்டரியுடன் 89 ரன்கள் விளாசி அசத்தினாலும் அபிஷேக் சர்மா 21 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 52 ரன்கள் அடித்து வெற்றிக்கு ஒரு காரணமாக விளங்கினார். நடப்பு டி20 உலகக்கோப்பையில் 3 டக் அவுட்கள் என மிக மோசமான பேட்டிங்கை அபிஷேக் சர்மா வெளிப்படுத்தினார். அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
34
உருக்கமாக பேசிய அபிஷேக் சர்மா
இந்த நிலையில், இன்று இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு பேசிய அபிஷேக் சர்மா பார்ம் இல்லாமல் தறி அழுததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ''கேப்டனும் பயிற்சியாளரும் என் மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். நானே கூட என்னைச் சந்தேகப்பட்டேன்.
இதற்கு முன்பு நான் இப்படி ஒரு சூழலை எதிர்கொண்டதில்லை, இது ஒரு கடினமான தொடராக இருந்தது. நான் எனது பயிற்சியைத் தொடர்ந்து செய்துகொண்டே, ஒவ்வொரு போட்டியாகக் கவனம் செலுத்தி வந்தேன், ஆனால் அது எளிதாக இருக்கவில்லை.
ஆனால் அணியும் நிர்வாகமும் என் மீது காட்டிய நம்பிக்கை அளப்பரியது. தொடரின் இடையில் நான் உணர்ச்சிவசப்பட்டேன். பார்ம் இல்லாமல் இரவுகளில் தூங்காமல் அழுதேன். கேப்டனிடமும் பயிற்சியாளரிடமும் பேச விரும்பினேன். அப்போது அவர்கள் முக்கியமான போட்டிகளில் நீயே எங்களை வெற்றி பெற செய்வாய் என்று கூறினார்கள். அது எனக்கு நிறைய நம்பிக்கை கொடுத்தது'' என்று தெரிவித்தார்.