சித்ரா பௌர்ணமி முக்கியத்துவம்
ஆண்டின் புனிதமான நாளில் சித்ரா பௌர்ணமியும் குறிப்பிடத்தகுந்தது. இந்து சாஸ்திரங்களின்படி, சித்ரா பௌர்ணமி அன்று பிரம்மா இந்த உலகத்தை படைத்ததாக கூறப்படுகிறது. பார்வதி தேவி முருகனை பெற்றெடுத்ததும், சிவனுடைய பிரபஞ்ச நடனமும் சித்ரா பௌர்ணமி அன்று தான் நிகழ்ந்தது. ஒவ்வொரு தனிமனிதரின் கர்மாவையும் மேம்படுத்த சித்ரா பௌர்ணமியில் பூஜை செய்வது நல்லதாக கூறப்படுகிறது. ஒருவருடைய புத்தி கூர்மையும், ஞான மேம்பாடும் சித்ரா பௌர்ணமி அன்று பூஜை செய்வதால் மேம்படும் என்றும் நம்பப்படுகிறது..