ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டி திதி அன்று முருக பெருமானை வழிபட வேண்டும். ஏனென்றால் முருகப் பெருமானின் விரத தினமாக சஷ்டி திதியை தான் சொல்வார்கள். மே மாதத்தின் சஷ்டி திதி நாளை (மே.11) வியாழக்கிழமை வருகிறது. சஷ்டி என்றால் அமாவாசை அல்லது பௌர்ணமிக்கு அடுத்ததாக வரக்கூடிய ஆறாம் நாள். அதிலும் வைகாசி மாத சஷ்டி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் விரதம் இருப்பதால், வீட்டில் அமைதி தங்கும். கஷ்டங்கள் நீங்கும்.