மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! ஆகஸ்ட் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை!

Published : Aug 26, 2025, 03:28 PM IST

புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள 30 துணை தாசில்தார் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெற உள்ளது. 

PREV
14

நீண்ட இடைவேளிக்கு பிறகு புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள 30 துணை தாசில்தார் பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்படவுள்ளது. துணை தாசில்தார் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் 101 தேர்வு மையங்களில் வருகிற 31-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

24

இந்த பதவிகளுக்கு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த அதிக இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் கடந்த 21ம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் https://recruitment.py.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

34

இதுதொடர்பாக ஏதேனும் விவரம் அல்லது உதவி தேவைப்பட்டால் தேர்வர்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

44

இந்நிலையில் புதுச்சேரியில் துணை தாசில்தார் பணிக்கு போட்டித் தேர்வு நடைபெறுவதை ஒட்டி ஆகஸ்ட் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories