என் தங்கமே லட்சுமி.. நீ போய்டியே! தன் வீட்டு உறவை இழந்தது போல் யானையின் இழப்பை நினைத்து கதறும் புதுவை மக்கள்!

First Published Nov 30, 2022, 2:51 PM IST

மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியின் மரணம்... ஒட்டு மொத்த புதுவை மக்களையும் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது. மேலும் லட்சுமியின் புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

லட்சுமியை மணக்குள விநாயகர் கோவில் யானை என்பதை விட, புதுவை மக்களின் செல்ல பிள்ளை என்றே சொல்லலாம். புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு தினம் தோறும் சாமி தரிசனம் செய்ய வரும் அனைவருமே... மறக்காமல் லட்சுமியை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கி செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

எந்த ஒரு நல்ல காரியத்தை செய்வதற்கு முன், கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு, லட்சுமியின் முகத்தை பார்த்துவிட்டு, ஆசீர்வாதம் வாங்கி சென்றால் நாம் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது புதுவை மக்களின் நம்பிக்கை.

சர்ப்ரைஸாக வளைகாப்பு நடத்தி... நடிகை திவ்யா ஸ்ரீதரை நெகிழ வைத்த செவ்வந்தி சீரியல் டீம் - வைரலாகும் வீடியோ

அதே போல் லட்சுமியை தினமும் பார்த்து விட்டு அதற்க்கு வாழை பழம், அருகம்புல் போன்றவற்றை வாங்கி தருவதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர். 

கடந்த 26 வருடங்களாக... புதுவை மக்கள் ஓவ்வொருவர் வீட்டிலும் ஒரு அங்கமாகவே மாறியுள்ள லட்சுமி மிகவும் ஆரோக்கியமாக இருந்த நிலையில் திடீர் என உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன செஞ்சாலும் வேலைக்கு ஆகவில்லை... ரசிகர்களின் மூன்று ஃபேவரட் சீரியல்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி.!

இன்று காலை வழக்கம் போல்... தன்னுடைய பாகனுடன் நடை பயிற்சி மேற்கொண்ட லட்சுமி, கால்வே காலேஜ் பள்ளி அருகே திடீர் என நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தது. கடந்த 1995 ஆம் ஆண்டு, தன்னுடைய 5 வயதில், மணக்குள விநாயகர் கோவிலுக்கு வந்த லட்சுமி அன்று முதல் புதுவை மக்களின் செல்ல பிள்ளையாகவே மாறியது.

விசேஷ நாட்களில்... காலில் நிறைய முத்துக்களுடன் வெள்ளி கொலுசு அணிந்து, அலங்காரங்களுடன் லட்சுமி நிற்கும் அழகே தனி தான். குறிப்பாக கோவிலுக்கு வரும் குழந்தைகள் முதலில் லட்சுமியை பார்த்து விட்டு தான் உள்ளே செல்வார்கள்.

துணிவு லுக்கிருக்கு எண்டு கார்டு..! மாஸ்ஸான நியூ லுக்கில் அஜித்..! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..

அனைவருடனும் அன்பாக பழகி, தன்னுடைய ஆசீர்வாதத்தை கொடுத்து வந்த லட்சுமி இன்று இல்லாமல் போனது... புதுவை மக்களை கண்ணீர் விட வைத்துள்ளது. லட்சுமியின் மறைவு ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கதறி வரும் அவர்கள், தங்கள் வீட்டில் ஒருவரை இழந்து விட்டது போல் உள்ளது என தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்... தொடர்ந்து லட்சுமிக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருவதும், என் தங்கமே... நீ போய்டியா என்கிற அழுகுரல் பார்ப்பவர்கள் நெஞ்சங்களையே கலங்க செய்துள்ளது. 

சன் டிவியின் முக்கிய சீரியலில் இருந்து விலகுகிறாரா கதாநாயகன்? அப்செட்டில் ரசிகர்கள்..!

லட்சுமியின் மரணத்திற்கு வனத்துறையினர் சரியாக மருத்துவ பரிசோதனை செய்யாதது தான் காரணம் என கூறப்பட்டு வரும் நிலையில், உடற்கூறாய்வு செய்து என்ன காரணாம் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

click me!