அப்போது அதிமுகவை 3ஆம் இடத்திற்கு தள்ளி 2வது இடத்தை சுயேட்சை சின்னம் மூலம் பெற்றார் ஓ.பன்னீர் செல்வம், இதனையடுத்து வருகிற 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் அதிமுக- பாஜகவுடன் மீண்டும் இணைந்தது. இதனால் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்க்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார். பாஜகவின் மத்திய தலைமை ஓபிஎஸ் மற்றும் அவரது அணியை தொடர்ந்து புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்தபோது, ஓபிஎஸ்ஸை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது, இது அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது