3. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள்:
பொதுவாகவே பூண்டு அதிகமாக சாப்பிடும் போது வாய் துர்நாற்றம் ஏற்படும். இதற்கு முக்கிய காரணம் அதிலிருக்கும் சல்பர் தான். அதிலும் குறிப்பாக, உங்களுக்கு ஏற்கனவே பாய் துர்நாற்றம் பிரச்சனை இருந்தால் பூண்டு சாப்பிடுவதே தவிர்க்க வேண்டும். இல்லையெனில், வாய் துர்நாற்றம் மேலும் அதிகரிக்கும்.
4. இரத்த போக்கு பிரச்சினை உள்ளவர்கள்:
இரத்த போக்கு பிரச்சினை மற்றும் ரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை எடுத்து கொள்பவர்கள் பூண்டு சாப்பிடுவது ஆபத்து. ஏனெனில் பூண்டு அவர்களின் பிரச்சினையை மேலும் அதிகரிக்கச் செய்யும். அதாவது, ரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளுடன் பூண்டு சேர்ந்தால், உடலில் இரத்த போக்கு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
5. கர்ப்பிணிகள் & தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்:
கர்ப்பிணிகள் & தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு சாப்பிடுவது நல்லது என்றாலும் இது அதிகமாக எடுத்துக் கொண்டால் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பால் சுரப்பை குறைத்துவிடும்.