குழந்தைகளுக்கு பவுடர் போடும்போது தாய்மார்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை:
- தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு பாடல் போடும்போது நேரடியாக முகத்தில் போடுவதற்கு பதிலாக ஒரு துணியில் பவுடரை தட்டி பிறகு குழந்தைகளுக்கு போடவும்.
- குழந்தைகளுக்கு பவுடர் போடும்போது அவர்களின் கண், வாய், மூக்கு போன்ற இடங்களில் பவுடர் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.
- அதுபோல குழந்தைகளை குளிப்பாட்டி வந்த உடனே அந்த ஈரத்துடன் பவுடர் போட வேண்டாம். குழந்தைகளின் சருமத்தை ஒரு டவளால் நன்கு துடைத்து அவர்களது சருமம் நன்கு உலர்ந்த பிறகு தான் பவுடர் போட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
- மேலும் குழந்தைக்கு டயப்பர் போடும் முன் அவர்களது அந்தரங்க பகுதியில் பெரும்பாலான தாய்மார்கள் பவுடரை அள்ளி போடுவார்கள். ஆனால் அது தவறு. இதனால் குழந்தையின் அந்த பகுதிகளில் எரிச்சல், அலர்ஜி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக குழந்தையின் கை, கால்கள் தொடை பகுதிகளில் பவுடர் பயன்படுத்தலாம்.