முளைகட்டிய பயிர் பச்சையாக இருப்பதால் அதில் ஈ-கோலி, சல்மோனெல்லா போன்ற ஆபத்தான பாக்டீரியாக்கள் இருக்கும். எனவே பச்சையாக சாப்பிடும் போது அந்த கிருமிகள் காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அது மட்டுமல்லாமல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் பாதிக்கப்படும், செரிமானம் அடைவதும் கடினமாக இருக்கும். மேலும் நம் உடலானது எல்லா வகையான சத்துக்களையும் அடைய முடியாமல் போகும்.