மூல நோய் உள்ளவர்கள் மிளகாய், கரம் மசாலா, வெங்காயம், இஞ்சி போன்ற காரமான உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அவை செரிமான அமைப்பை மேலும் எரிச்சலாக்கி ஆசனவாய் அருகே அரிப்பு, எரிச்சல், வலி, வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் அமிலத்தன்மை மற்றும் இரைப்பை பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். எனவே மூல நோய் உள்ளவர்கள் அதிக நார்ச்சத்தும் மற்றும் எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளை சாப்பிடுங்கள்.