முகத்தில் இருக்கும் சுருக்கத்தை நீக்க :
இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க முதலில், ஒரு பெளலில் இரண்டு ஸ்பூன் கடலை மாவு மற்றும் தேவையான அளவு தக்காளி சாறு கலந்து, பிறகு அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி சுமார் 10 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு, குளிர்ந்த நீரில் முகத்தில் கழுவுங்கள். இந்த ஃபேஸ் பேக்கை நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உங்கள் முகத்தில் இருக்கும் சுருக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும்.
முகத்தில் வழியும் எண்ணெயை போக்க :
உங்கள் முகத்தில் அளவுக்கு அதிகமாக எண்ணெய் வழிக்கிறது என்றால், ஒரு பௌலில் இரண்டு ஸ்பூன் கடலை மாவு, சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து, அந்த பேஸ்ட்டை உங்களது முகத்தில் தடவி சுமார் 20 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு, முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவுங்கள். இந்த ஃபஸ் பேக்கை நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால், உங்கள் முகத்தில் இருக்கும் எண்ணெயை பசை நீங்கும்.