Coolest Hill Stations: இந்தியா முழுக்க வெயில் கொளுத்துகிறது. ஆனால், சில இடங்களில் மட்டும் வெப்பநிலை மிகவும் குறைவாக இருக்கிறது. அப்படிப்பட்ட டாப் 5 சுற்றுலாத் தலங்கள் எவை என்று தெரியுமா?
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் வெயில் ருத்தரதாண்டவம் ஆடி வருகிறது. இதனால் பொதுமக்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் வருவதற்கே அஞ்சுகின்றனர். சுகாதாரத்துறை தரப்பில் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. தமிழகத்தில் மட்டும் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க இந்தியாவில் குளு குளு இடங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
26
நைனிடால் (Nainital) - உத்தரகாண்ட்
உத்தரகாண்டில் உள்ள இந்த இடத்தை 'ஏரிகளின் நகரம்' என்று அழைக்கிறார்கள். இது ஹனிமூன் ஜோடிகளுக்கு ஒரு சொர்க்கம். குடும்பத்துடன் ஜாலியாக நேரத்தை செலவிடலாம். குறிப்பாக, நைனி ஏரியில் படகு சவாரி செய்வதும், மால் ரோட்டில் ஷாப்பிங் செய்வதும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இங்கிருந்து ஸ்னோ வியூ பாயிண்ட்டில் இருந்து இமயமலையைப் பார்க்கலாம்.
எப்படி செல்வது:
டெல்லியிலிருந்து கத்தோடம் வரை ரயிலில் சென்று, அங்கிருந்து டாக்ஸியில் நைனிடாலை அடையலாம். பேருந்துகளும் உள்ளன.
பட்ஜெட்:
4 முதல் 5 நாள் பயணத்திற்கு ஒரு நபருக்கு ரூ.18,000 - ரூ.22,000 வரை செலவாகும்.
36
குஃப்ரி (Kufri) - இமாச்சலப் பிரதேசம்
சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க வட இந்தியாவில் உள்ள மலைவாசஸ்தலங்கள் ஒரு சூப்பர் சாய்ஸ். சிம்லாவுக்கு மிக அருகில் இருக்கும் இந்த குட்டி கிராமம், கோடை காலத்தில் மிகவும் அமைதியாக இருக்கும். கோடையிலும் இங்கு வெப்பநிலை 10°C முதல் 20°C வரைதான் இருக்கும். பசுமையான பள்ளத்தாக்குகளும், பனி மூடிய இமயமலை சிகரங்களும் கண்ணுக்கு விருந்தளிக்கும். குஃப்ரி ஃபன் வேர்ல்ட், கினியட் பார்க் ஆகியவை இங்கு முக்கிய இடங்கள்.
எப்படி செல்வது:
ஹைதராபாத் அல்லது விஜயவாடாவிலிருந்து முதலில் டெல்லி அல்லது சண்டிகருக்குச் செல்ல வேண்டும். அங்கிருந்து பேருந்து அல்லது டாக்ஸியில் குஃப்ரி செல்லலாம்.
பட்ஜெட்:
5 நாள் பயணத்திற்கு ஒரு நபருக்கு சுமார் ரூ.15,000 - ரூ.20,000 வரை ஆகும். ஒரு சிறிய குடும்பத்திற்கு ரூ.50,000 வரை செலவாகும்.
இந்த இடத்தை 'மலைகளின் ராணி' (Queen of Hills) என்று அழைக்கின்றனர். கெம்ப்டி ஃபால்ஸில் (Kempty Falls) குளிப்பதும், கன் ஹில் பாயிண்டிலிருந்து சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பதும் ஒரு அற்புதமான அனுபவம். கோடை காலத்தில் இங்கு வீசும் ஜில் காற்று உடலை சிலிர்க்க வைக்கும்.
எப்படி செல்வது:
டேராடூன் வரை ரயில் அல்லது விமானத்தில் சென்று, அங்கிருந்து 1.5 மணி நேர பயணத்தில் முசோரியை அடையலாம்.
பட்ஜெட்:
4 நாள் பயணத்திற்கு ஒரு நபருக்கு ரூ.15,000 - ரூ.18,000 வரை செலவாகும்.
56
மணாலி (Manali) - இமாச்சலப் பிரதேசம்
பனி மூடிய மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள அழகான நகரம் மணாலி. சாகசப் பிரியர்களுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் இதுதான் முதல் சாய்ஸ். ரோஹ்தாங் பாஸ் (Rohtang Pass) பகுதியில் கோடை காலத்திலும் பனியை ரசிக்கலாம். சோலாங் பள்ளத்தாக்கில் பாராகிளைடிங், ரிவர் ராஃப்டிங் போன்ற சாகச விளையாட்டுகளில் ஈடுபடலாம். இங்குள்ள ஹிடிம்பா தேவி கோயில் மிகவும் பிரபலம்.
எப்படி செல்வது:
சண்டிகர் அல்லது டெல்லியிலிருந்து வோல்வோ பேருந்துகள் மூலம் பயணம் செய்வது சிறந்தது.
பட்ஜெட்:
6 நாள் பயணத்திற்கு ஒரு நபருக்கு சுமார் ரூ.20,000 - ரூ.25,000 தேவைப்படும்.
66
லடாக் (Ladakh) - ஜம்மு காஷ்மீர்
உண்மையான சாகசப் பயணம் செய்ய விரும்புவோருக்கு லடாக் ஒரு கனவுப் பிரதேசம். கோடை காலத்தில், குறிப்பாக மே முதல் செப்டம்பர் வரை மட்டுமே இங்கு செல்ல முடியும். பாங்காங் ஏரி (Pangong Lake), நுப்ரா பள்ளத்தாக்கு மற்றும் உலகின் உயரமான சாலைகள் உங்களை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். இதனால்தான் பலர் பைக்குகளிலும், சொந்த வாகனங்களிலும் இங்கு சாகசப் பயணம் மேற்கொள்கின்றனர்.
எப்படி செல்வது:
நேரடியாக லே (Leh) விமான நிலையத்திற்கு செல்வது எளிது. இல்லையெனில், மணாலியிலிருந்து சாலை வழியாக சாகசப் பயணம் செய்யலாம்.
பட்ஜெட்:
7 முதல் 8 நாள் பயணத்திற்கு ஒரு நபருக்கு விமான டிக்கெட்டுகளுடன் சேர்த்து சுமார் ரூ.35,000 - ரூ.50,000 வரை செலவாகும்.
முக்கிய குறிப்பு:
கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், ஹோட்டல்கள் மற்றும் டிக்கெட்டுகளை குறைந்தது 2 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்வது நல்லது. இந்த இடங்கள் குளிர்ச்சியாக இருப்பதால், ஸ்வெட்டர்கள் அல்லது ஜாக்கெட்டுகளை எடுத்துச் செல்வது அவசியம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.