குழந்தைகள் வினோதமான பொருள்களை கண்டால் குதுகலமாகிவிடுவார்கள். அதனால் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்பவும், அழுகையை நிறுத்தவும் பெற்றோர் மொபைல்போனை கொடுக்கின்றனர். ஆனால் நாளடைவில் மொபைல் போன் கொடுக்காவிட்டால் அவர்கள் அழத் தொடங்கிவிடுவார்கள். அதை கொடுத்தால் அழுகை நின்றுவிடும். இதை நிறுத்த குழந்தை மருத்துவ நிபுணர் சையத் முஜாஹித் ஹுசைன் சில டிப்ஸ் சொல்கிறார்.