Sukran Peyarchi 2022 Palangal: வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி சுக்கிரனின் ராசி மாற்றம், அனைத்து ராசிகளில் சிறப்பாக இருக்கும்..அப்படியாக யாருக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிடத்தின் பார்வையில், சுக்கிரன் கிரகம் ஆடம்பர வாழ்கை, செல்வம், செழிப்பு, கவர்ச்சி, அழகு மற்றும் காதல் உறவுகளின் காரணியாக கருதப்படுகிறது. சுக்கிரன் கிரகம் ஒவ்வொரு 23 நாட்களுக்கும் ராசியை மாற்றுகிறது. அதன்படி, இந்த கிரகம் கடக ராசியை விட்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைகிறது. இதன் சுப மற்றும், அசுப பலன்கள் 12 ரசிகளிலும் இருக்கும். அப்படியாக, யாருக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த ராசியில் சுக்கிரன் கிரகம் வருவதால், இவர்கள் வாழ்வில் மட்டும் மகிழ்ச்சி பெருகும். உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், அதே போல் பணம் தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும். இந்த ராசிக்காரர்கள் நல்ல செயல்களுக்கு மரியாதை பெறுவார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை பிறக்கும்.
சுக்கிரன் இந்த ராசியின் அதிபதியானவர். சுக்கிரன் சிம்ம ராசியில் சஞ்சரிப்பதால் துலாம் ராசிக்காரர்களின் பொருளாதார நிலை வலுப்பெறும். பிள்ளைகள் தரப்பிலிருந்தும் சில நல்ல செய்திகள் வரலாம். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தம் செய்வது நன்மை தரும். காதல் உறவில் வெற்றி பெறலாம். சிறு வியாபாரிகளும் லாபம் அடைவார்கள். உறவினர்கள் மூலம் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
44
shukra grah 001
விருச்சிகம்
இந்த ராசியிலிருந்து பத்தாம் வீட்டில் சுக்கிரனின் சஞ்சாரம் நடக்கிறது. இதுவும் சுப பலன்களைத் தரும். இந்த ராசிக்காரர்களின் தொழில் முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உண்டாகும். பணம் தொடர்பான எந்த வேலையும் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.