வருடக்கணக்காகப் பழகிப்போன ஒரு பழக்கத்தை ஒரே நாளில் மாற்றுவது என்பது சற்றே கடினமான காரியம் தான். ஆனால், ஆரோக்கியமான வாழ்விற்கு சில எளிய மற்றும் சுவையான மாற்றங்களை நாம் உடனே செய்ய வேண்டியது அவசியமாகும்:
கால இடைவெளி மிகவும் முக்கியம்: உங்களுக்கு டீ மற்றும் தின்பண்டங்கள் இரண்டுமே வேண்டும் என்றால், டீ குடித்ததற்கும், தின்பண்டங்கள் சாப்பிடுவதற்கும் நடுவில் குறைந்தது 30 முதல் 45 நிமிடங்களாவது இடைவெளி விடுங்கள். இதனால் செரிமான மண்டலம் பாதிக்கப்படாமல் தப்பிக்கும்.
சத்தான தின்பண்டங்களைத் தேர்ந்தெடுங்கள்: எண்ணெயில் பொரித்த பஜ்ஜி, வடைக்கு மாற்றாக, அவித்த சுண்டல், அவித்த வேர்க்கடலை, பாசிப்பயிறு, காராமணி, முளைகட்டிய தானியங்கள், பொரி அல்லது சீசன் பழங்களை மாலை நேர உணவாக உட்கொள்ளலாம். இவை உடலுக்குத் தேவையான நார்ச்சத்தையும், புரதச்சத்தையும் வழங்கும்.
தேநீரில் ஆரோக்கிய மாற்றம்: பாலில் சர்க்கரை கலந்து குடிக்கும் வழக்கமான டீக்கு மாற்றாக, கிரீன் டீ (Green Tea), பிளாக் டீ (Black Tea), எலுமிச்சை தேநீர் (Lemon Tea) அல்லது பாரம்பரிய சுக்கு மல்லி காபி போன்றவற்றை உடலுக்குக் கேடு விளைவிக்காத நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கலந்து குடிக்கப் பழகலாம்.