நம் நாட்டின் சுதந்திரப் போராட்டம் நடந்த காலத்தில் சுவாமி விவேகானந்தர் வாழ்ந்தாலும், நேரடியாக அரசியல் பணியில் தன்னை ஈடுபடுத்தவில்லை. ஆனால் அதில் ஈடுபட்டவர்களிடையே விவேகானந்தர் தாக்கம் இருந்தது. அகிம்சை வழியில் சுதந்திரம் வேண்டுமென போராடிய மகாத்மா காந்திக்கு, விவேகானந்தர் புத்தகங்கள் தேசபக்தியை அதிகமாக்கியது. தனிப்பட்ட மனிதனுடைய ஆளுமையை வளர்தெடுப்பதில் விவேகானந்தர் அருளிய இலக்கியத்தை விட வேறெதுவும் சிறந்ததில்லை என்கிறார் நேதாஜி.