
பொதுவாக இரவு நேரம் வந்தாலோ நாம் சிறுநீர் குறைவாக தான் போவோம். சிலர் தூங்க செல்வதற்கு முன் சிறுநீர் கழிப்பது தான் பிறகு காலையில் தான் செல்வம் போவார்கள். ஆனால், குளிர்காலத்தில் அதற்கு மாறாக நடக்கும். கோடை காலத்தை விட குளிர்காலத்தில் தான் அடிக்கடி சிறுநீர் கழிப்பதாக பலர் கூறுகின்றனர். இன்னும் சிலரோ சில மணி நேரங்களுக்கு ஒரு முறை சிறுநீர் கழிப்பதாக சொல்லுகின்றன. அதிலும் குறிப்பாக இரவில் ஆழ்ந்து தூக்கத்தில் இருக்கும்போது அழைக்கப்படாத விருந்தாளி போல் சிறுநீர் வரும். இதனால் தூக்கம் தான் கெடும். நீங்களும் குளிர்காலத்தில் இந்த பிரச்சனையால் சிரமப்படுகிறீர்கள் என்றால், சிறுநீர் கழிப்பதை குறைக்க சில அற்புதமான டிப்ஸ்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குளிர்காலத்தில் அடிக்கடி சிறுநீர் போவது ஏன்?
உண்மையில் நம்முடைய உடல் வெப்பநிலையானது 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வேண்டும். ஆனால் குளிர் காலத்தில் குளிரின் காரணமாக இது அதிகமாகும். எனவே இந்த வெப்பநிலையை பராமரிக்க உடலுக்கு அதிக ரத்த ஓட்டம் தேவைப்படுகின்றது. இதன் காரணமாக நம்முடைய இதயம் மிக வேகமாக பம்ப் செய்யப்படுகின்றது. உடலில் ரத்த ஓட்டம் அதிகரிப்பால் உடலில் உற்பத்தியாகும் ஆற்றலானது உடலில் இருந்து முழுமையாக வெளியேறாமல், உடலில் ரத்த நாளங்களை சுருங்க செய்கின்றது. இதன் காரணமாக ரத்த ஓட்டமானது வேகமாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், ரத்தமானது உடல் முழுவதிலும் முன்பை விட வேகமாக சுழலும். இதனுடன் உடலில் இருக்கும் உள் உறுப்புகளும் வேகமாக செயல்பட ஆரம்பிக்கும். சிறுநீரகங்களும் அவற்றில் ஒன்று. இதன் காரணமாக தான் குளிர் காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.
இதையும் படிங்க: யூரின் கொஞ்சமா போகுதா..? அசால்டா இருக்காதீங்க... இந்த ஆபத்தான நோய்கள் வரும்!
மற்றொரு காரணம்:
குளிர்கால வானிலை காரணமாக சிறுநீர் அடிக்கடி கழிக்கும்போது சிறுநீரானது நல்ல அளவில் வெளியேறும் மற்றும் சிறுநீரின் அழுத்தத்தை நீங்கள் அடிக்கடி உணரமாட்டீர்கள். அதுவே நீங்கள் ஒவ்வொரு மணி நேரமும் சிறுநீர் கழிக்க போகிறீர்கள் என்றால், அதற்கு சளி தான் காரணம். அதுவும் குறிப்பாக, நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது சிறுநீரானது சில துளிகள் அல்லது சிறிதளவு மட்டுமே வெளியேறும்.
இதையும் படிங்க: அச்சோ! தும்மும் போது சிறுநீர் கசியுது என்று சொல்லும் நபரா? காரணம் இதுதாங்க..!
இதற்குத் தீர்வு என்ன?
- இந்த பிரச்சனையை தவிர்க்க நீங்கள் சாதாரண வெப்பநிலையில் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். முக்கியமாக, குளிர்ந்த நீரை குடிப்பதற்கு பதிலாக, குளிர்ச்சி போகும் வரை சூடான நீரை குடிக்க வேண்டும்.
- குளிர்காலத்தில் அதிகளவு டீ அல்லது காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதன் காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைந்து, அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டும். அதற்கு பதிலாக மஞ்சள் பால், சூடான சூப் போன்றவற்றை குடிக்கலாம்.
- உடல் குளிர்ச்சி ஆவதை தடுக்க காது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால் அதை மூடி வைக்க வேண்டும். இதற்காக நீங்கள் கம்பளி தொப்பி பயன்படுத்தலாம்.
- குளிர்ந்த காற்று வீட்டிற்குள் வராதவாறு அறையின் கதவை மூடி வைக்க வேண்டும் இதனால் அறையில் வெப்பநிலை பராமரிக்கப்படும் மற்றும் குளிர் இருக்காது.
- குளிர்காலத்தில் பகல் நேரத்தில் வெயில் அடிக்கும் போது சிறிது நேரம் வெயிலில் இருக்கவும் இதனால் உடல் வெப்பமாகும் ரத்த நாளங்களும் திறக்கப்படுகின்றது.