புனே மணிப்பால் மருத்துவமனையை சேர்ந்த கார்டியாலஜி மருத்துவர் எர்மல் ஜெயின்,"கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால் பல உடல் நலக் கோளாறுகள் வரும். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது, புகைபிடித்தல், மது அருந்துதல், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்றவை கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது. இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு, மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை வரும்"என்கிறார்.