ஒவ்வொருவரும் தங்கள் கொலஸ்ட்ரால் அளவை முறையாக கண்காணிப்பது அவசியம். கொலஸ்ட்ரால் இருக்கும்போது உடல் பாகங்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் குறுக்கீடுகளால் கூச்சம் வரும். உயர் இரத்த கொலஸ்ட்ரால் அளவுகள் இருக்கும்போது இரத்தம் அடர்த்தியாக ஓடுகிறது.
25
புனே மணிப்பால் மருத்துவமனையை சேர்ந்த கார்டியாலஜி மருத்துவர் எர்மல் ஜெயின்,"கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால் பல உடல் நலக் கோளாறுகள் வரும். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது, புகைபிடித்தல், மது அருந்துதல், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்றவை கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது. இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு, மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை வரும்"என்கிறார்.
35
அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் உங்கள் கை, கால் விரல்கள் அதிக வலியை உணரும். கைகள் மற்றும் கால்களின் இரத்தத் தமனிகளில் கொலஸ்ட்ரால் படிவதால் அவற்றைத் தொடும்போது வலி உண்டாகும். கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதற்கான மற்றொரு அறிகுறி விரல்கள் மற்றும் கால்விரல்களில் கூச்ச உணர்வு தோன்றுவதாகும்.
45
அதிக கொலஸ்ட்ரால் தோலில் மஞ்சள் நிற படிவுகளை தோற்றுவிக்கும். சிலருக்கு கண் இமைகளைச் சுற்றி வட்டமாக தட்டையாக அல்லது சற்று உயர்ந்த மஞ்சள் நிற வளர்ச்சி இருக்கும். இதனை சாந்தெலஸ்மா என்கின்றனர். இது உள்ளங்கை பாதங்களின் கீழ்புறம் கூட வரலாம். ஹைப்பர் கொலஸ்ட்ரால், ஹைபர்டிரிகிளிசெரிடெமியா ஆகிய நோயாளிக்கு இருதய, நரம்பியல் நோய்களுக்கு வழிவகுக்கும்.
கொலஸ்ட்ரால் நோயைத் தடுக்க, வாழ்க்கை முறை மாற்றம் அவசியம் தேவை. உணவுமுறை, உடற்பயிற்சி ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும். அதிகமான அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.