ஒர்கவுட்டிற்கு பிறகு சூடான நீரில் குளித்தால் உடலில் கூடுதல் அழுத்தம் ஏற்படும். அது மட்டுமல்லாமல் உடற்பயிற்சி செய்யும்போது உடலானது சூடாகவும், இதயத்துடிப்பு அதிகமாகவும் இருக்கும். மேலும் இரத்த நாளங்களானது உடலை குளிர்விக்க அகலமாக விரிவடையும். இத்தகைய சூழ்நிலையில், சூடான நீரில் குளித்தால் உடலானது மேலும் சூடாகும். இதன் விளைவாக லேசான தலைச் சுற்றல் அல்லது மயக்கம் கூட வரலாம் என்கின்றனர் நிபுணர்கள். குறிப்பாக உடற்பயிற்சி செய்யும்போது உங்களுக்கு அதிகமாக வியத்தால், சூடான நீரில் குளிக்கும் போது வியர்வை மேலும் அதிகரிக்கமாகும். இதனால்தான் உடற்பயிற்சிக்கு பிறகு உடனே சூடான நீரில் குளிப்பது நல்லதல்ல என்று சொல்லப்படுகிறது.