சிறுவாபுரி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா 19 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பக்தர்கள் லட்சக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி அருகே சின்னப்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது.
24
immersion ceremony at siruvapuri murugan temple
பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது 19 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
இதற்காக ஒரு கோடி செலவில் புனரமைப்பு பணிகள் முன்னதாக மேற்கொள்ளப்பட்டன. இன்று நடைபெற்ற குடமுழுக்கு விழா அதிகாலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. மந்திரங்கள் மேளதாள ஓசையுடன் துவங்கியது.
குடமுழுக்கு விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு சிறுவாபுரி விழாக்கோலம் பூண்டது. காவல்துறையினர் மற்றும் கோவில் விழா குழுவினர்முன்னிருந்து நடத்தியிருந்தனர்.