இன்று மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் பாதைகள், அருங்காட்சியகம், நூலகம், மெரினா பீச், கோவில் மற்றும் தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகம் என பலவற்றில் சிறந்த நவீன நகரமாகக் காட்சியளிக்கும் சென்னை மாநகரம், தோன்றி இன்றுடன் 382 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. ஆம், தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் கி.பி 1639ம் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி ஆகும்.