ஏர் கூலர்:
உங்கள் வீட்டில் ஏர் கூலர் இருந்தால் இந்த ஐஸ் கட்டிகளை போட்டு உபயோகித்தால் அதில் வரும் சில்லென்ற காற்று அந்த அறை முழவதும் ஈரத் தன்மையான காற்றை வழங்கும்.
கதவு மற்றும் ஜன்னல்கள்:
சம்மர் காலத்தில் வீட்டில் இருக்கும் கதவு மற்றும் ஜன்னல்களை கூடுமானவரை திறந்து வைத்துக் கொள்வது சிறப்பு. குறிப்பிட்டு சொன்னால் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை ஜன்னல் கதவுகளை திறந்து வைப்பது சிறப்பு. அதிகாலையான காலை 3 முதல் 7 மணி வரை குளிர்ந்த காற்று உங்கள் வீட்டை குளுகுளுவென்று வைத்துக் கொள்ளும்.
வீட்டில் கொசுத் தொல்லை இருப்பவர்கள் கொசு வலை போட்டு ஜன்னல் கதவை திறந்து வைக்கலாம். மேலும் ஜன்னல்களில் வெள்ளை நிற கர்டெய்ன் போட்டு வைத்தால் சூரியனிலிருந்து வரும் அதிக வெப்பத்தை தடுத்து நிறுத்தும்.
இந்த எளிய வழிமுறைகளை நீங்களும் பின்பற்றி உங்களது வீட்டை குளுகுளுவென்று வைத்துக் கொண்டு சம்மரில் இருந்து தற்காத்துக் கொள்ளுங்கள்.