ஒருவரால் ஒதுக்கப்பட்டு.. இன்று பலருக்கு வாழ்வளிக்கும் அஃப்சனா!

Published : Mar 21, 2023, 04:54 PM IST

நொய்டாவில் சிறு ஸ்டால் அமைத்து தொழில்செய்து வருகிறார் அஃப்சனா. இந்த தொழில் தொடங்குவது குறித்து குடும்பத்தாரிடம் தெரிவித்த போது அரவது மாமியார் அனுமதிக்கவில்லை என்கிறார் அஃப்சனா.  

PREV
13
ஒருவரால் ஒதுக்கப்பட்டு.. இன்று பலருக்கு வாழ்வளிக்கும்  அஃப்சனா!

அஃப்சனா, தொழில்முனைவோரான இவர், தான் கடந்து வந்த கடினமான பாதை குறித்து இங்கே விளக்குகிறார். தலைநகர் டெல்லியை அடுத்த நொய்டாவில் திருணமத்திற்கு பிறகு கணவர் அயூப்கானுடன் குடியேறினேன். அப்போது தொழில் தொடங்குவது குறித்து என் வீட்டில் தெரவித்த போது என் கணவர் உட்பட அனைவரும் எதிர்த்தனர். என் மாமியார் அதை அனுமதிக்கவே இல்லை.

இதனால், என்னை அனைவரும் வெறுக்க ஆரம்பித்தனர். சிறிது நாளிலேயே என் கணவர் என்னை விட்டு பிரிந்தார். அடுத்த 6 மாதங்களில் நானும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டேன். ஆனால், பசி மற்றும் நிதி தேவைக்காக நான் பிடிவாதமாக என் சொந்த காலில் நிற்க ஆசைப்பட்டேன். என் விடாமுயற்சியின் பலனாக என் தொழிலை தொடங்கினேன். பின்னாளில் என் குடும்பத்தாரும் அவரவர் தோல்வியை ஒப்புக்கொண்டு என்னை அனுமதித்தனர்.
 

23

இப்போது என் கணவர் துணையுடன் தொழில் செய்து வருகிறேன். முதன்முதலில் 2003ம் ஆண்டு வெறும் ரூ.3000 ரூபாயில் தொழிலை ஆரம்பித்தேன். தினமும் காலையில் தலையில் துணியுடன் ஊர் ஊராகச் சென்று விற்று மாலையில் வீடு திரும்புவது என் வழக்கம்.

ஒரு கட்டத்தில், நானே ஆடைகளை தயாரித்து விற்கவேண்டும் என நினைத்த போது தான் மகளிர் சுய உதவிக்குழுக்களை நாடினேன். கைவினைக் கலைஞர்களிடம் இருந்து தயாரிக்கப்பட்ட ஆடைகளை பெற்று நானே ஆடைகளை தயாரிக்க ஆரம்பித்தேன். இன்று, கடவுளின் அருளால் ஆண்டுக்கு லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறேன். என் சேவையின் பலனாக ஒரு முறை அரசாங்கமும் எனக்கு ரூ.50,000 நிதியுதவி மானியம் வழங்கியது.

இப்போது எனது ஆடைத் தொழில், டெல்லி, சென்னை, பாட்னா, மும்பை, உத்தரகாண்ட், டேராடூன், போன்று பிரபலமான அனைத்து நரங்களிலும் பரந்து விரிந்துள்ளது. இந்த என் வளர்ச்சிக்கு என் குழு தான் முழுமுதற் காரணம். அவர்களுக்கு நான் கடமைபட்டுள்ளேன்.
 

33

இப்போது, என் குழுவின் சுமார் 400 பெண்கள் இணைந்து பணியாற்றி வருகிறார். ஒரு குழுவில் பல குழுக்கள் உருவாக்கப்பட்டு அந்த குழு மூலம் ஏராளமான பெண்கள் பலன் பெற்று வருகிறார்கள்.

அஃப்சனாவின் கணவர் முகமது அயூப் கூறுகையில், இங்கு கையால் தயாரிக்கப்பட்ட ஆடைகள் மட்டுமே கிடைக்கும். ராம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்கள் தங்கள் வீடுகளில் ஆடை தைக்கும் வேலையைச் செய்கிறார்கள், “என் மனைவி வீட்டிற்கு வெளியே சென்று வேலை செய்ய விரும்பியபோது, ​​ஒரு பெண் வீட்டிற்கு வெளியே வேலை செய்வது எப்படி என்று நாங்கள் யோசித்தோம், ஆனால், இன்று அது தவறு என ஒப்புக்கொண்டேன். அதனால் நான் அவளுடன் நிற்க வேண்டிய நேரம் வந்தது. அவளுடன் இப்போது நான் தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கிறேன் என்றார்.

அஃப்சனா தொடர்ந்து பேசுகையில், இந்த அரசாங்கத்தில் பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க பல்வேறு வாய்ப்புகளை அளிக்கிறது. பெண்களும் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வழியில் எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றிலிருந்து நாம் கற்றுக்கொண்டு மீண்டும் முன்னேற வேண்டும் என்கிறார்.

விவசாயிகளுக்கு குட்நியூஸ்.. கரும்புக்கு சிறப்பு ஊக்கத்தொகை அறிவிப்பு..!

Read more Photos on
click me!

Recommended Stories