பொதுவாக சூப், கிரேவி மற்றும் சாஸ்களை தடிமனாக்க தான் சோள மாவு பயன்படுத்தப்படுகின்றது. இதுதவிர சிக்கன், மீன் மற்றும் காய்கறிகள் வறுக்கும் முன் அதை மிருதுவாக்க இது பயன்படுத்தப்படுகிறது. சோள மாவை ஈரப்பதத்தில் இருந்து விலக்கி வைத்தால் கெட்டுப்போகாது. அதுபோல காற்று புகாத கண்ணாடி ஜாடியில் இதை சேமித்து வைத்தால் நீண்ட காலம் வரை பயன்படுத்தலாம்.