இந்தக் கீரை மூளையின் வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெயர்போனது. வல்லாரை உண்பதால் மூளை செயல்பாடு, சிந்தனைத் திறன் மேம்படும். குழந்தைகள் கவனம் சிதறாமல் படிக்க உதவும். வல்லாரை பொடியை தேனுடன் கலந்து கொடுக்கலாம்.
மேலே சொல்லப்பட்டுள்ள மூன்று மூலிகைகளையும் அவ்வப்போது குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்கள் மூளையின் ஆரோக்கியம் மேம்படும். ஞாபக சக்தி, படைப்பாற்றல் போன்றவை சிறப்பாக செயல்பட உதவியாக இருக்கும். இது தவிர மனதை ஒருநிலைப்படுத்தும் தியானம், யோகா பயிற்சிகளையும் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பழக்கப்படுத்தலாம். இது அவர்களுடைய மனநலனை மேம்படுத்துவதோடு மூளை ஆரோக்கியத்தையும் சிறப்பாக வைத்திருக்க உதவும். இதனால் நன்றாக படிப்பார்கள்.