ஆண்கள் தங்களுடைய முதுமையை நெருங்கும் 40, 50 அல்லது 60 வயதுகளில் குழந்தையை பெற்று கொண்டு அவர்களை கவனித்து கொள்வது சாதாரணமான விஷயம் அல்ல. அவர்களுக்கே அரவணைப்பு தேவைப்படும் காலகட்டம் அது. வயது அதிகரித்த பின் தந்தையாகும் பலருக்கும் மன அழுத்தம், சோர்வு, தனிமை ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைக்கும், தந்தைக்கும் இடையில் பாசப் பிணைப்புக்கு பதிலாக ஒரு தலைமுறை இடைவெளி ஏற்படுகிறது. இருவரின் ஆர்வங்கள், தகவல் பரிமாற்ற முறை, வாழ்வியல் மதிப்புகள் மாறியிருக்கும். அதனால் புரிதல் குறைவாகவும், இருவருக்கும் இடையில் இடைவெளி அதிகமாகவும் உருவாகும். இதை களைய தந்தையர்கள் தனிக்கவனம் எடுத்து முயற்சி செய்வது அவசியம். அப்படி செய்தால் மட்டுமே தந்தை, மகன்/மகள் உறவு சிறப்பாக இருக்கும். இது தாய்க்கும் பொருந்தும்.
இந்தப் பதிவில் தாமதித்த கருவுறுதலால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை தெரிந்து கொண்டோம். 30 வயதுக்குப் பின் தந்தையாக நினைக்கும் ஒவ்வொரு ஆணும் இந்த சிக்கல்களையும் மனதில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால் நம் வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு விஷயங்களுக்கும் நாமே பொறுப்பாளர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.