- மாவை கைகளால் கலக்கும் போது மாவு மிக எளிதாக புளிக்கும். ஏனெனில் நம் கைகளில் உள்ள சூடு மாவில் பரவி மாவினை எளிதில் குளிக்க வைத்து விடும்.
- கிரைண்டரில் அரிசி அரைக்கும் போது அதனுடன் அவல் அல்லது வடித்த சாதத்தை சேர்த்து அரைக்கவும். இப்படி செய்தால் மாவு சீக்கிரமாக புளிக்கும்.
- குளிர்காலத்தில் குளிர் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு பதிலாக வெப்பமான இடங்களில் மாவு பாத்திரத்தை வைத்தால் மாவு சீக்கிரமாக புளிப்பதற்கு உதவும்.
- மாவு அரைக்கும் போது சிறிது சூடான நீரை பயன்படுத்தினால் சீக்கிரமாக குளிப்பதற்கு உதவும். ஆனால் உப்பு சேர்க்க வேண்டாம்.
- மஉங்களுக்கு விருப்பம் இருந்தால் மாவு அரைத்த பிறகு அதில் கால் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளுங்கள். இது குளிர்காலத்தில் மாவு சீக்கிரம் குளிப்பதற்கு உதவும்.