கனவுகள் ஏன் வருகிறது? எப்படி வருகிறது. கனவுகளில் வருவது எல்லாம் நிஜமா? அவை ஏற்கனவே நடந்ததா? அல்லது நடக்கப்போகிறதா? கனவு சாஸ்திரம் கூறும் ரகியம் என்ன தெரிந்துகொள்வோமா! தொடர்ந்து படியுங்கள்!
கனவு என்பது, நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம் எண்ண ஒட்டங்கள் பெருமூளைக்கும் சிறுமூளைக்கும் கடந்துகொண்டிருக்கும். அதன் சில குளறுபடிகளே இந்த கனவுகள் ஆகும். நமக்கு தெரிந்த விஷயங்கள், நாம் யோசித்த செய்திகள் அவைகள் மட்டுமே கனவில் வரும். கனவில் நடந்தவையின் பெரும் பகுதி முழிக்கும் போது நினைவில் இருக்காது.
24
கனவுகள் பலிக்குமா?
கனவு சாஸ்திரம் கூறுவதன் அடிப்படையில், ஒரு கனவு குறிப்பிட்ட நேரத்தில் வந்தால் அது நனவாகும் என்பது ஐதீகம். எந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்கும் என்று தானே கீட்கிறீர்கள்? தெரிகிறது. பிரம்ம மூகூர்தத்தில் வரும் கனவு பலிக்கம் என்கிறது கனவு சாஸ்திரம். அறிவியல் கூற்றுப்படி இது உண்மை அல்ல.
மதியவேளை ஆழ்ந்த உறக்கத்தில் கூட கனவு வரலாம். பொதுவாக இரவில் வரும். நிஜமாகவே நடப்பது போன்ற கனவுகள் வரலாம். கனவில் வரும் சில குறிப்புகள் உங்களின் நன்மை மற்றும் தீமையை குறிக்கிறது. மழை, வெண்சங்கு ஆகியவற்றை கண்டால் உங்களுக்கு விரைவில் நல்லது நடக்கபோகிறது என்று கனவு சாஸ்திரம் சொல்கிறது.
பால், மலை, கனிகள் நிறைந்த மரம், மலர்கள் போன்றவை உங்கள் கனவில் வந்தால், அவை அனைத்தும் நல்ல சகுனத்தையே குறிப்பதாக கனவு சாஸ்திரம் சொல்கிறது.
44
நண்பகல் நேர கனவுகள்
மதிய வேளைகளில் ஆழந்த உரக்கத்தின்போது சிலருக்க் கனவுகள் வரும். ஆனால் அவை பலிக்காது என்கிறது கனவு சாஸ்திரம். அதே போல் இரவு 10 மணியிருந்து 12 மணி வரை வரும் கனவுகளும் எந்த பலனையும் தராது என்கிறது கனவு சாஸ்திரம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.