உலர் பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் வால்நட், மற்ற எல்லா வகை நட்ஸ்களையும் விட சற்று சுவையிலும் ஆரோக்கிய விஷயத்திலும் வேறுபட்டது. இது மூளைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ள உலர் பழமாகும். ஆம், இது பல நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகிறது.
இது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. இந்த வால்நட்டை என்னும் அக்ரூட்டை ஊறவைத்து காலையில் வெறும் சாப்பிடுவது இன்னும் கூடுதல் நன்மையைத் தரும். ஊறவைத்த வால்நட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க...Sani: தீபாவளி முதல் அள்ளிக்கொடுக்கும் சனியில் நேரடி அருளை பெறப்போகும் ராசிகள்..உங்கள் ராசியும் இதில் இருக்கா.?
இந்த வால்நட் பருப்பில் புரதம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், தாமிரம், செலினியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற பல சத்துக்களும் அதிகம் உள்ளன.குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.
உடல் எடையை குறைக்க உதவும்:
அதிகரித்து வரும் எடையை எந்த வகையிலும் குறைக்க முடியாதவர்கள், தினமும் ஊறவைத்த வால்நட்ஸை கட்டாயம் சாப்பிட வேண்டும். ஏனெனில் அதில் புரதத்தின் அளவு அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் காணப்படுகின்றன.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்
வால்நட்ஸை காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். இதனால் நம் உடலில் எந்த ஒரு நோய் தொற்றுகளும் அவ்வளவு எளிதாக தாக்கிவிட முடியாது. மேலும், உடலுக்கு தேவையான ஆற்றல் தருகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்:
நீரிழிவு ஒரு தீவிர பிரச்சனையாக மாறியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், தினமும் 2-3 ஊறவைத்த வால்நட் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது எளிதாகிறது. மேலும், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்கிறது.