அதிக புரத உணவுகளில் பியூரின்கள் என்கிற பொருட்கள் இருக்கும். அது உடலுக்குள் உடையும் போது யூரிக் அமிலம் உருவாகிறது. இது ஒவ்வொருவரின் உடலில் ஏற்படும் பொதுவான நிகழ்வு தான். எனினும், யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. பொதுவாக உடலில் சேரும் யூரிக் அமிலங்களை சிறுநீரகங்கள் வெளியேற்றிவிடுகின்றன. அந்த செயல்பாடு பாதிக்கப்படும் போது, யூரிக் அமிலம் உடலில் அதிகளவில் தங்கிவிடுகிறது.
இதனால் மூட்டு வலி, வீக்கம், கீல்வாதம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். அப்படி ஏற்படும் பிரச்னைகளுக்கு ஆப்பிள் சைடர் வினிகர் சிறந்த தீர்வுகளை வழங்குகிறது. கீல்வாத சிகிச்சைக்கு உதவுவது மட்டுமில்லாமல், இது முழுமையாக பிரச்சனையில் இருந்து விடுபட காரணமாக உள்ளது. ஆப்பிள் சைடர் வினிகரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. இதன்காரணமாகவும் உடலில் யூரிக் அமிலங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும் இதை குடித்து வருவதால், இரத்தத்தில் pH அளவும் அதிகமாகிறது.
ஆர்வத்தை தூண்டும் பெண்களின் விசித்திரமான பாலியல் கற்பனைகள்..!!
மேலும் உடலுக்கு எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கும், கல்லீரலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்வதற்கும் ஆப்பிள் சைடர் வினிகர் உதவி புரிகிறது. இதை தொடர்ந்து பருகி வந்தால் நீரிழிவு நோய், புற்றுநோய், இருதய பாதிப்பு சார்ந்த நோய் எதுவும் உங்களை அண்டாது. உடல் எடை, நீரிழிவு அளவு, கொலஸ்ட்ரால் அளவு உள்ளிட்டவை கட்டுக்குள் இருக்கும்.
உங்களுடைய ’செக்ஸ் லைஃப்’ சிறக்க பிரபல நடிகர் சொல்லும் சூத்திரங்கள்..!!
ஆப்பிள் சைடர் வினிகரை எப்போதும் முதலில் தண்ணீரில் கலந்து தான் குடிக்க வேண்டும். இதை நேரடியாக குடித்துவிட்டால், ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும். ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் அளவில் தான் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்துகொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் அல்லது உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பு இதை பருகலாம்.