குளிர் பானங்கள் :
சர்க்கரை நோயாளிகள் மதிய உணவோடு, குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். காரணம் குளிர்பானங்களில் செயற்கை இனிப்புகள் அதிகம் சேர்க்கப்படுவதால், அவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, மதிய வேளையில் குளிர்பானத்தை குடிப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதுபோல, அதிக இனிப்பு உள்ள பழங்களையும் சாப்பிடக்கூடாது உதாரணமாக மாம்பழம் வாழைப்பழம் பலாப்பழம் லிச்சிஸி போன்றவையாகும்.
என்ன சாப்பிடலாம்?
நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை மதிய உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால், புரதமும், நார்ச்சத்தும் சம அளவிலும்... கார்போஹைட்ரேட்டுகள் மிதமான எடுத்துக்கொள்ளுங்கள். இதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.
கார்போஹைட்ரேட்டுகள் நன்மை என்றாலும், அது நாம் எடுத்துக் கொள்ளும் உணவே பொறுத்து வேறுபடும். எனவே, இதற்கு நீங்கள் பழுப்பு அரிசி ஓட்ஸ் ஸ்கினோவா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். முக்கியமாக, சரிவிகித உணவை எப்போதும் எடுத்துக் கொள்ளுங்கள். அதுதான், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.