
கிட்டத்தட்ட எல்லாருடைய வீட்டிலும் கண்டிப்பாக இருக்கும். இது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். நெய் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருப்பது மட்டுமின்றி சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். அந்த வகையில், நீங்கள் சூடான நீரில் நெய் கலந்து எப்போதாவது குடித்திருக்கிறீர்களா?
உண்மையில், சூடான நீரில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். இதனால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் சமநிலையில் இருக்கும். எனவே தினமும் காலை நெய்யை சூடான நீரில் கலந்து குடித்து வந்தால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: நெய் '1' ஸ்பூன்.. தினமும் இரவில் பாதத்தில் தடவுங்க; பல பிரச்சனைகளுக்கு தீர்வு!!
சூடான நீரில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
1. தினமும் காலை சூடான நீரில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை விரைவாக குறையும்.
2. நெய்யில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடல் உள்ளே இருந்து சுத்தம் செய்து, நல்ல குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.
3. சூடான நீரில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து குடித்து வந்தால் வளர்ச்சியை மாற்றம் செயல்முறைகள் மிகவும் சீராக செயல்படுவது மட்டுமின்றி, அஜீரண கோளாறு பிரச்சனையையும் தீர்க்கும்.
4. நெய் உடல் எடையை அதிகரிக்கும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் சூடான நீரில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடித்து வந்தால் எடை கட்டுக்குள் இருக்கும் மற்றும் தொப்பையும் குறையும்.
5. உங்களுக்கு பலவீனமான நினைவாற்றல் இருந்தால் சூடான நீரில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து குடித்து வந்தால் உங்களது நினைவாற்றல் கூர்மையாகும்.
6. நெய்யில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படுவது மட்டுமின்றி பல வகையான தொற்று நோய்களை எதிர்த்து போராட பெரிதும் உதவுகிறது.
7. நெயில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன் திட்டங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் பளபளப்பாகவும் இளமையாகவும் வைக்கும்.
8. நெய்யை காலையில் வெறும் வயிற்றில் சூடான நீரில் குடித்து வந்தால் ரத்த ஓட்டம் மேம்படும்.
9. நெயில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. எனவே வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடித்து வந்தால் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.
10. நெய்யில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. எனவே சூடான நீரில் ஒரு ஸ்பூன் நெய் குடித்து வந்தால் மனம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் மற்றும் மூளை நன்றாக செயல்படும்.
எப்படி குடிக்க வேண்டும்?
இதற்கு ஒரு ஸ்பூன் நெய் சிறிது சூடாக்கி பிறகு வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இந்த பானம் குடித்த பிறகு 30 நிமிடங்களுக்குள் எதுவும் சாப்பிட வேண்டாம் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: நெய்யை எத்தனை நாள் வைத்து சாப்பிடலாம் தெரியுமா?