ஐபிஎல் 2020: இதெல்லாம் சரியில்ல.. டேரக்ட்டா ஐசிசி கமிட்டியிடம் பேசிய பாண்டிங்..!

First Published Oct 7, 2020, 9:01 PM IST

ஐசிசி கமிட்டியிடம் முக்கியமான ஒரு விவகாரத்தில் விதியை மாற்றியமைப்பது குறித்து டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனுமான ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.
 

மன்கட் ரன் அவுட் என்பது கிரிக்கெட்டின் புழக்கமான வார்த்தைதான் என்றாலும், அது ரசிகர்களிடையே மிகுந்த பிரபலமானது, அஷ்வினால் தான். கடந்த ஐபிஎல்(2019) சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லரை அஷ்வின் மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார்.
undefined
ரன்னர் முறையில் இருக்கும் பேட்ஸ்மேன், பவுலர் பந்துவீசுவதற்கு முன்பாகவே க்ரீஸை விட்டு நகர்ந்தால், பவுலர் செய்யும் ரன் அவுட்டிற்கு பெயர் தான் மன்கட். ஐசிசி விதிப்படி மன்கட் ரன் அவுட் விதிமுறைக்குட்பட்டதே என்றாலும், பலரும் அது ஸ்போர்ட்ஸ் ஸ்பிரிட் கிடையாது என்று கூறுகின்றனர்.
undefined
அஷ்வின் மன்கட் ரன் அவுட் செய்தபோதே, அதற்கு முன்னாள், இந்நாள் வீரர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் இருந்துவரும் நிலையில், இந்த சீசனில் அஷ்வின் டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக ஆடிவரும் நிலையில் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பே, டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், அஷ்வினை இந்த முறை மன்கட் செய்ய விடமாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
undefined
மேலும் இதுகுறித்து அஷ்வினுடன் பேசவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அதேபோலவே நடப்பு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன், இதுகுறித்து அஷ்வினுடன் பாண்டிங் பேசினார்.
undefined
அந்த உரையாடலில், கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்படும்போது, பேட்ஸ்மேன் அப்படி நகர்ந்து சென்றால், என்ன செய்வது என்ற நியாயமான கேள்வியை அஷ்வின் முன்வைத்ததாக கூறிய பாண்டிங், ஆனாலும் மன்கட் செய்யாமல் எச்சரிக்கை விட வேண்டும் என்பதே தனது கருத்து எனவும், அதேவேளையில் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றக்கூடாது எனவும் கூறிய பாண்டிங், அதுமாதிரி பந்துவீசுவதற்கு முன்பாகவே ரன்னர் முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் நகர்ந்து சென்றால், ரன் பெனால்டி விதிக்கும்படி ஐசிசி விதியை மாற்றலாம் என்று பாண்டிங் தெரிவித்திருந்தார்.
undefined
இந்நிலையில், இந்த சீசனில், தான் ஆடிய 2வது போட்டியிலேயே தனது செயல்பாடு சரிதான் என்பதை, தனது செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த பாண்டிங்கிற்கு புரியவைக்க நினைத்த அஷ்வினுக்கு, அதற்கு அருமையான வாய்ப்பை உருவாக்கி கொடுத்தார் ஆர்சிபி வீரர் ஆரோன் ஃபின்ச்.
undefined
ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அஷ்வின் பந்துவீசும்போது ஆரோன் ஃபின்ச் நீண்ட தூரம் நகர்ந்து சென்றார். இந்த முறை மன்கட் ரன் அவுட் செய்யாத அஷ்வின், ஃபின்ச்சை எச்சரித்தார்.
undefined
அதன்பின்னர், இதுகுறித்து டுவீட் செய்த அஷ்வின், இதுதான் இந்த சீசனுக்கான முதலும் கடைசியுமான வாய்ப்பு. இனிமேல் எச்சரிக்கை விடமாட்டேன். மன்கட் ரன் அவுட் செய்துவிடுவேன் என்று பாண்டிங்கை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.
undefined
அதுகுறித்து பேசிய அஷ்வின், இந்த விவகாரத்தில், பந்துவீசுவதற்கு முன்பாகவே ரன்னர் முறையில் நிற்கும் பேட்ஸ்மேன் க்ரீஸை விட்டு நகர்ந்தால், ரன் பெனால்டி விதிப்பது குறித்து ஐசிசி கமிட்டியிடம் பேசுவதாக பாண்டிங் கூறியதாக அஷ்வின் தெரிவித்துள்ளார்.
undefined
ரன்னர் முனை பேட்ஸ்மேன் பந்துவீசும் முன்பே க்ரீஸை விட்டு நகர்ந்தால், ரன் பெனால்டி விதிக்கும்படி விதியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்த பாண்டிங், சொன்னமாதிரியே அதுகுறித்து ஐசிசி கமிட்டியிடம் பேசியிருக்கிறார்.
undefined
click me!