தயிரில் உப்பு சேர்த்து சாப்பிடுவது ரொம்ப நல்லது. ஏனெனில் தயிரில் ஏற்கனவே புரோபயாடிக் பண்புகள் உள்ளன. அவை செரிமானத்திற்கு உதவும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உப்பு சேர்த்தால் செரிமான நொதிகளின் உற்பத்தியை மேலும் தூண்டி, செரிமானத்தை துரிதப்படுத்தும். குறிப்பாக செரிமான பிரச்சினை உள்ளவர்களுக்கு தயிரில் உப்பு சேர்த்து சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதுபோல உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வியர்வை மூலம் எலக்ட்ரோலைட்டுகள் இழக்கப்படும். எனவே இவர்கள் தயிரில் உப்பு சேர்த்து சாப்பிடுவது நன்மை பயக்கும்.
கவனிக்க வேண்டியவை : உப்பு அதிகமாக சேர்த்தால் உயர் இரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும். அதுபோல சுத்திகரிக்கப்பட்ட உப்புக்கு பதிலாக இந்துப்பு, கருப்பு பயன்படுத்துவது நல்லது.