இன்றைய மாசு நிறைந்த உலகில் வெளியே செல்லும் போது, அலுவலகங்களுக்காக பயணிக்கும் போது தூசி மற்றும் துகள் போன்றவை கண்களில் விழும். இதை வெளியேற்றுவது சற்று சிரமம். அப்படிப்பட்ட சமயங்களில் நாம் அழும் போது, கண்களுக்குள் இருக்கும் எல்லாவிதமான அழுக்கு, தூசி மற்றும் துகள் போன்றவை வெளியேறிவிடும்.
பிறந்த குழந்தை வயிற்றில் இருந்து வெளியே வந்தவுடன், அது நன்றாக கத்தி அழும். இதன்மூலம் குழந்தையின் நுரையீறல் புறவாழ்க்கைக்கு ஏற்றவாறு மாறிவிடும். அதற்கு அழுகை தான் பெரிதும் உதவக்கூடிய செயல்பாடாகும். கண்களில் இருந்து வரும் கண்ணீரில் புரதம் உள்ளது. இது நியூரான்களில் வளர்ச்சிக்கு முக்கியமாக தேவைப்படக்கூடிய ஒன்றாகும்.
அன்பிற்குரியவரை தவிர மற்றவர்கள் நம் உதட்டையே பார்த்தால் என்ன அர்த்தம் தெரியுமா..??
எப்படிப்பட்ட தூக்கமிருந்தாலும் நாம் மனம் விட்டு அழுதுவிட்டால், நரம்பு மண்டலத்தில் ஒரு விளைவு ஏற்பட்டு, அது உடலுக்கு ஓய்வை தரும். இதையடுத்து மனமும் அமைதி அடையும். நாம் சிந்தும் கண்ணீரில் இதையும் கடந்து பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. அதனால் அழுகையை இனிமேல் பலவீனமாக கருத வேண்டாம். அழுகை இயல்பான ஒன்று தான். அதை எப்போதும் இயற்கைக்கு மாறாக பார்க்கக்கூடாது.